கொடைக்கானலில் பனிக் காலம் தொடங்கியதையடுத்து நிலவும் அதிக குளிரால் பொது மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
கொடைக்கானலில் பொதுவாக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள்பனிக் காலமாகும். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் பருவ நிலை மாற்றம் காரணமாக கொடைக்கானலில் மழை பெய்து வந்தது. இதனால் பனியின் தாக்கம் குறைந்திருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் பனியும், பலத்த காற்றும் வீசி வருகிறது. கடந்த 2 நாள்களாக குறைந்தளவு 13 டிகிரி செல்சியஸ் நிலவி வருவதால் பனிக்காலம் தொடக்கத்திலேயே அதனுடைய தாக்கம் அதிகரித்துள்ளது. இன்னும் 3 மாதங்களுக்கு பனியின் தாக்கம் அதிகரித்தே காணப்படும். எனவே வழக்கமான பணிகளை மேற்கொள்வதில் சிரமம் இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.