பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதினி இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட நிர்வாகி முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். நந்தவனம் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இராஜேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் திண்டுக்கல் மாவட்டச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இதனை முத்துமாணிக்கம் வெளியிட முனைவர் குமார், ராஜாத்தி செல்வக்கனி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.