திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து  66 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

திண்டுக்கல் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 66 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 66 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியைச் சேர்ந்தவர் சேவியர். துபையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெசிந்தா. இந்நிலையில், வீட்டை பூட்டிவிட்டு, தனது தாயார்  ஜெயமேரியுடன் உறவினர் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்றுள்ளார். பின்னர், இரவு 10 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்த ஜெசிந்தா, பின் கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து வீட்டினுள் சென்று பார்த்தபோது, 66 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com