ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஸ்ரீராமபுரம் சமுதாயக்கூட கட்டடத்தில், பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, பாஜக ரெட்டியார்சத்திரம் ஒன்றியத் தலைவர் வீரப்பன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொருளாளர் ஸ்டாலின், மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை புறநகர் மாவட்டப் பொதுச் செயலர் மூவேந்தர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், டெங்கு காய்ச்சலை ஒழிப்பது குறித்தும், மழைநீர் தேங்காமல் இருக்க தூர்வாரும் பணிகளை அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி 1-ஆவது வார்டில் பாஜக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திண்டுக்கல் மாவட்டப் பொதுச் செயலர் முத்துராமலிங்கம் கலந்து கொண்டு கொடியேற்றிப் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட விவசாய அணித் தலைவர் டி. ரமணி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சித் தலைவர் பெருமாள், ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கிளைத் தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.