ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஓடைப்பட்டி கொங்கபட்டியைச் சேர்ந்த விவசாயி வீராச்சாமி (45). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் அம்பிளிக்கை சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ஒட்டன்சத்திரம்-கே.கீரனூர் சாலை மண்டவாடி பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்பிளிக்கை போலீஸார் விசாரிக்கின்றனர்.