jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்

தண்ணீர் கட்டணம் வசூலிக்க மறந்த மாநகராட்சி நிர்வாகம்: பல லட்சம் ரூபாய் இழப்பு

By DIN  |   Published on : 15th November 2017 08:38 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

கடந்த 8 ஆண்டுகளாக ஆர்.எம்.காலனியில் உள்ள 288 வீடுகளுக்கு தண்ணீர் கட்டணம் வசூலிப்பதை நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மறந்ததால், பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் கடந்த 1980 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், அரசு  ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டது. மொத்தம் 288 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், நிர்வாக பொறுப்பினை வீட்டு வசதி வாரியமே மேற்கொண்டு வந்தது. அதையடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு திண்டுக்கல் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது முதல், இந்தப் பகுதிக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, கழிவுநீர் ஓடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இந்த வீடுகளுக்கு, குடிநீரற்ற பிற பயன்பாடுகளுக்கான தண்ணீர் அதே பகுதியில் அமைந்துள்ள கிணறுகளிலிருந்து குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. வீட்டு வசதி வாரிய நிர்வாக்ததின் கீழ் இருந்தவரை, தண்ணீர் விநியோகத்துக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்தக் கட்டணத்தை தொடர்ந்து வசூலிக்க நகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொள்ளவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டபோதிலும், 288 வீடுகளுக்கு குடிநீர் இல்லாத பிற தேவைக்கான தண்ணீர்  விநியோகிக்கும் செலவு மாநகராட்சி சார்பிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
மோட்டார் இயக்குவதற்கான மின்சாரக் கட்டணம் மட்டுமின்றி, தண்ணீர் குழாய் பழுது மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட  இதர செலவுகளையும் மாநகராட்சி  நிர்வாகமே செய்து வந்துள்ளது. இதனால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடந்த 8 ஆண்டுகளாக சுமார் ரூ.14 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சில நாள்களுக்கு முன்பு ரூ. 80 கோடி செலவில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்துக்காக ஆர்.எம்.காலனி பகுதிக்குச் சென்ற மாநகராட்சி அலுவலர்கள், 288 வீடுகளுக்கு தண்ணீர் கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.  
மாநகராட்சிப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் மட்டுமின்றி, ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுவதற்கு, இதுபோன்ற நிர்வாகக் குறைபாடுகளே முக்கிய காரணம் என ஊழியர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது:  பழைய நடைமுறைகளை பின்பற்றியே, புதிதாக வரும் அலுவலர்களும் செயல்படும் நிலை உள்ளது. இதனால், தண்ணீர் விநியோகத்துக்கான செலவுகள் குறித்து இதுவரை தெரியவில்லை. தற்போது கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால், பல வீடுகள் காலியாக உள்ளன. மேலும், மின் மோட்டார் பழுது காரணமாக தண்ணீர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. 2018 மே மாதத்துக்குள் அனைத்து வீடுகளையும் காலி செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக தண்ணீர் கட்டணம் வசூலிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து

வீடியோக்கள்

சஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு
மிஸ்டர் சந்திரமௌலி டிரைலர்
ரயில் மோதி 11 மாணவர்கள் பலி
ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்