திண்டுக்கல்
இருசக்கர வாகனத்தில் பெட்டியில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருட்டு
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் அப்பியம்பட்டி ஏ.நால்ரோட்டைச் சேர்ந்தவர் விவசாயி சிவசாமி (44). இவர் சனிக்கிழமை கள்ளிமந்தையத்தில்
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் அப்பியம்பட்டி ஏ.நால்ரோட்டைச் சேர்ந்தவர் விவசாயி சிவசாமி (44). இவர் சனிக்கிழமை கள்ளிமந்தையத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் கடனாக ரூ. 2 லட்சம் பெற்றார். இதையடுத்து அந்தப் பணத்தை தனது இருசக்கர வாகனப் பெட்டியில் வைத்துக் கொண்டு ஊருக்கு திரும்பி உள்ளார். இதற்கிடையில் ஏ.நால்ரோட்டில் உள்ள முருகேஷ் என்பவரது இரும்பு கடைக்கு முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு, சாவியை எடுக்காமல் இரும்புக்கடைக்குள் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்து உள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் பெட்டியில் வைத்திருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.