பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் தனியார் நற்பணி மன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.
இளங்கடல் இளைஞர்கள் டிரஸ்ட் சார்பில் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா பாலசமுத்திரம் 2 ஆவது வார்டு சமுதாயக்கூடத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பழனி சட்டப் பேரவை உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கலந்து கொண்டு சேவைத் திட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்களும், டிரஸ்ட் நிர்வாகிகள் பங்கேற்றனர்.