பைக் மோதி முதியவர் சாவு

ஒட்டன்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

ஒட்டன்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
 ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் துரைராஜ் (67). இவர் வியாழக்கிழமை பழனி- ஒட்டன்சத்திரம் சாலை கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட நடத்துச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.  அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிகிழமை உயிரிழந்தார்.   ஒட்டன்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com