கொடைக்கானலில் வியாழக்கிழமை (அக். 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வத்தலகுண்டு மின் செயற்பொறியாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.