கொடைக்கானலில் உள்ள புனித பாத்திமா மாதா கோயில் திருவிழா புதன்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடைக்கானல் செண்பகனூர் தைக்கால் பகுதியிலுள்ள இந்த கோயில் திருவிழாவையொட்டி புனித சேவியர் ஆலயப் பங்குத் தந்தை ஏஞ்சல்ராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி, நவநாள் ஜெபவழிபாடு ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 10 நாள்கள் கோயிலில் சிறப்புத் திருப்பலி மற்றும் நவநாள் ஜெப வழிபாடு நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள், விழாக்குழுவினர் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.