விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை வழங்கல்

விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.4.32 லட்சத்திற்கான காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை எஸ்பி இரா.சக்திவேல் வியாழக்கிழமை வழங்கினார்.

விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.4.32 லட்சத்திற்கான காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை எஸ்பி இரா.சக்திவேல் வியாழக்கிழமை வழங்கினார்.
 திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் வெங்கடசாமி. இவர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி திருச்சி- திண்டுக்கல் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அரசு ஊழியர்களுக்கு மட்டும் அஞ்சல்துறை நடத்தம் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்திருந்தார். அந்த காப்பீட்டுத் தொகை கோரி அவரது மனைவி மகாலட்சுமி விண்ணப்பித்திருந்தார்.
   இதனை அடுத்து, திண்டுக்கல் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சி.ராமலிங்கம் முன்னிலையில், எஸ்பி இரா.சக்திவேல், ரூ.4.32 லட்சத்திற்கான காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை மகாலட்சுமியிடம் வழங்கினார்.
    இதற்கான ஏற்பாடுகளை காப்பீட்டுத் திட்ட வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com