திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வியாழக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ. 30 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீராமபுரம் மரியமங்கலபுரத்தைச் சேர்ந்தவர் க.அய்யாவு (56). இவரது வீட்டின் அருகே 3 வீடுகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், அய்யாவு மற்றும் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த அனைவரும் தோட்ட வேலைக்காக வியாழக்கிழமை சென்றுள்ளனர்.
பின்னர், மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்த போது அங்கிருந்து 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதை அய்யாவு பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.30ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் அய்யாவு அளித்த புகாரின்பேரில், மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.