பழனியில் உணவு விடுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

பழனியில் உணவு விடுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனியில் உணவு விடுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
 பழனியில் கல்லூரிகள், பள்ளிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் வாரத்துக்கு மூன்று நாள்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அமைப்புகளும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.  இதனிடையே பழனியில் திங்கள்கிழமை பல்வேறு உணவு விடுதிகள் மற்றும் உணவகங்களில் தரமான உணவுப்பொருள்கள் தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டதுடன் அவற்றின் தரமும் ஆய்வு செய்யப்பட்டது.
 தொடர்ந்து உணவக வாயில்களில் நிலவேம்பு குடிநீர் வைக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது.  பழனி நகர்நல அலுவலர் மோகனரங்கம் இந்நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று நிலவேம்பு குடிநீரைஅருந்திச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com