பழனியில் தீபாவளியை முன்னிட்டு ஆர்.எப்.ரோட்டில் பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் குவிந்ததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
புதன்கிழமை தீபாவளித் திருநாள் என்பதால் ஆர்.எப்.ரோடு, மார்க்கெட் பகுதிகளில்
துணி மற்றும் பேன்சி கடைகளில் மக்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், சாலையின் இருபுறமும் ஏராளமான தாற்காலிகக் கடைகள் வைக்கப்பட்டிருந்தன.
பெரிய கடைகளுக்கு செல்ல முடியாத கிராம மக்கள் இங்கு ரெடிமேட் துணிகள், பேன்சி பொருள்களை வாங்கினர். பட்டாசு கடைகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் குறைவான கடைகளே போடப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் ஏராளமானோர் பட்டாசு வாங்க குவிந்தனர். ஏராளமான போலீஸாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.