கொடைக்கானல் நகராட்சி வளாகத்தில் புதன்கிழமை பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் காலியிடம் வைத்துள்ளவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தங்களது விண்ணப்பங்களை நகராட்சி ஆணையர் சரவணனிடம் வழங்கினர். முகாமில் உதவி நிர்வாக பொறியாளர் டி.அசோகன், உதவி பொறியாளர் வி.அசோகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.