திண்டுக்கல், கொடைக்கானலில் அண்ணா பிறந்தநாள்: சிலைக்கு கட்சியினர் மரியாதை

திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் பெரியகுளத்தில் வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 109ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு

திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் பெரியகுளத்தில் வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 109ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு திமுக, அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியிலிருந்து அண்ணா சிலை நோக்கி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு திமுக மாநில துணைப் பொதுச் செயலர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் அர.சக்கரபாணி, பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் எம்ஏ.ஆண்டிஅம்பலம், சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவர் எஸ்.காந்திராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கொடைக்கானல்: அண்ணா பிறந்த நாளையொட்டி கொடைக்கானல் அதிமுக சார்பில் நகரச் செயலர் ஸ்ரீதர் தலைமையில் கே.சி.எஸ்.திடலிலிருந்து ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் பிரையண்ட் பூங்கா அருகிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ. வேணுகோபாலு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர்கள் கலந்து கொண்டனர். அதே போல் கொடைக்கானல் திமுக சார்பில் நகரச் செயலர் முகமது இப்ராஹிம் தலைமையில் கே.சி.எஸ்.திடலிருந்து ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் பிரையண்ட் பூங்காவிலுள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகரம், மேல்மலை, கீழ்மலை ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த திமுகவினர் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் நகரச் செயலர் கோவிந்தன் தலைமையில் கே.சி.எஸ்.திடலிலிருந்து ஊர்வலமாகச் சென்று பிரையண்ட் பூங்காவிலுள்ள அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் மேல்மலை ஒன்றியச் செயலர் பொன்னுத்துரை, கீழ்மலை ஒன்றியச் செயலர் ஜெயக்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பெரியகுளம்: பெரியகுளம் பழைய பேருந்துநிலையத்தில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பார்த்திபன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலர் என்.வி.ராதா, ஒன்றியச் செயலர் அன்னபிரகாஷ், நிர்வாகிகள் சிவக்குமார், முருக்கோடை ராமர் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com