பழனி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி வேன் ஓட்டுநர் சாவு

பழனி சண்முகநதி அருகே வெள்ளிக்கிழமை பள்ளியில் வேனை கழுவிக் கொண்டிருந்த அதன் ஓட்டுநர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

பழனி சண்முகநதி அருகே வெள்ளிக்கிழமை பள்ளியில் வேனை கழுவிக் கொண்டிருந்த அதன் ஓட்டுநர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
பழனி சண்முகநதியை அடுத்த பனையடியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் தாமரைக்குளத்தை சேர்ந்த கங்கைஅமரன் (33)  என்பவர் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை மாலை பள்ளியில் வேனை கழுவி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மோட்டாரை இயக்கிய போது அதில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கங்கைஅமரன் உயிரிழந்தார். இதுகுறித்து பழனி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். பள்ளியில் மின்சார வயரிங்கை முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம் என போலீஸ் ஆய்வின் போது தெரியவந்துள்ளது. இறந்த கங்கை அமரனுக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com