பழனியில் பக்தரின் கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

பழனி அடிவாரம் பகுதியில் வெள்ளிக்கிழமை பக்தரின் கார் கண்ணாடியை உடைத்து பணம், நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பழனி அடிவாரம் பகுதியில் வெள்ளிக்கிழமை பக்தரின் கார் கண்ணாடியை உடைத்து பணம், நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வத்தலகுண்டுவைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ராஜா தனது குடும்பத்தினருடன் பழனியில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்பதற்காக காரில் வந்தார்.
திருமணம் முடிந்த பின் திருஆவினன்குடி கோயில் அருகே காரை நிறுத்தி விட்டு சுவாமி தரிசனம் செய்யச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த 7 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் இருந்த கைப்பையை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அடிவாரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com