ரத்ததான முகாம்

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம், நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம், பாப்பம்பட்டி முதன்மை சுகாதார மையம் மற்றும் பழனி அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமை பழனிக் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தொடக்கி வைத்தார்.
துணை ஆணையர் (பொறுப்பு) மேனகா முன்னிலை வகித்தார். முதல்வர் (பொறுப்பு) கந்தசாமி வரவேற்றார். முகாமில் 56 அலகுகள் ரத்தம் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டது.
தொடர்ந்து அரசு மருத்துவமனை சார்பில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் ராமச்சந்திரன், ராஜலட்சுமி உள்ளிட்டோர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com