கூலித் தொழிலாளி மாயம்

ஒட்டன்சத்திரம் அருகே லேத் பட்டறை தொழிலாளியை காணவில்லை என காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே லேத் பட்டறை தொழிலாளியை காணவில்லை என காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 திண்டுக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்துள்ள சட்டையப்பனூரைச் சேர்ந்த தங்கவேல் மகன் செந்தில்குமார் (35). இவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த செப். 11-ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
 அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து அவரது தந்தை தங்கவேல் செவ்வாய்க்கிழமை ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து மாயமான செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com