திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கிறிஸ்துவ பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதாகக் கூறி, இந்து மக்கள் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செ.வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச்செயலாளர் வெ.ரவிபாலன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், தமிழ்மணி, மாவட்ட செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகர தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.