கொடைக்கானலில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது
கொடைக்கானலில் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் விழா அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அண்ணாநகரில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் தலைவர் சுப்புக்குட்டி தலைமை வகித்தார். செயலர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 100-பேருக்கு இலவச கம்பளி வழங்கப்பட்டது.
திமுக நகரச் செயலர் முகமது இப்ராஹிம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கொடைக்கானல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகரத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் கே.சி.எஸ்.திடலில் இருந்த அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.