தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் சாவு

பழனி அருகே  ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.

பழனி அருகே  ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.
பழனியை அடுத்த கணக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து.  இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.  இவரது வீட்டில்  பெரிய  தண்ணீர் தொட்டி உள்ளது.  ஞாயிற்றுக்கிழமை மாலை மாரிமுத்துவின் ஒரு வயது மகன் தினேஷ் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தொட்டியில் விழுந்துள்ளார்.  இதைப்பார்த்த பெற்றோர், சிறுவனை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டான்.  இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com