பழனி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

தொடர்விடுமுறை காரணமாக  பக்தர்கள் பழனி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.

தொடர்விடுமுறை காரணமாக  பக்தர்கள் பழனி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர்விடுமுறை காரணமாக பழனி மலைக்கோயிலில் அதிகாலை முதலே காணும் இடமெல்லாம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  இலவச தரிசன வரிசை மட்டுமன்றி, கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருந்தனர்.  கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இழுவை ரயில் மற்றும் ரோப்கார் நிலையங்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அன்னதான மண்டபத்திலும் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com