ஒட்டன்சத்திரம் அருகே கார்- பைக் மோதல்: ஒருவர் சாவு

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டியைச் சேர்ந்தவர் பார்த்தீபன்  (42). இவர் காங்கேயத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காங்கேயத்தில் இருந்து கோபால்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலை அம்பிளிக்கை அருகே வந்த போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
    இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com