கொடைக்கானலில் அமைதிப் பேரணி

காஷ்மீரில் சிறுமி ஆசிபாவை வன்கொடுமை செய்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி கொடைக்கானலில் பல்வேறு அமைப்பைச்

காஷ்மீரில் சிறுமி ஆசிபாவை வன்கொடுமை செய்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி கொடைக்கானலில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூஞ்சிக்கல் மற்றும் ஏரிச்சாலைப் பகுதியில் ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதி பேரணி நடத்தினர்.
 இந்நிகழ்ச்சியின் போது இறந்த சிறுமியின் புகைப்படம் மற்றும் பாலியல் கொடுமைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். இதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com