கொடைக்கானல் அருகே கஞ்சா விற்ற 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இங்குள்ள மன்னவனூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கொடைக்கானல் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார் மன்னவனூர் பேருந்து நிலையம், கைகாட்டி, கவுஞ்சி செல்லும் வழியில் நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் மன்னவனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (45), கண்ணன் (54), முத்து (34), ராமதாஸ் (37), சுப்பிரமணி (39) ஆகியோரிடம் இருந்து 5 கிலோ 950 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.