கொடைக்கானல் அருகே குடிநீர் குழாயை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் அருகே மேல்மலைக் கிராமமான மன்னவனூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் அதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் அருகே மேல்மலைக் கிராமமான மன்னவனூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் அதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 மன்னவனூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதியான கவுஞ்சி செல்லும் வழியில் ஆற்றங்கரைப் பகுதியில் செல்லும் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. தற்போது கோடை காலமாக இருப்பதால் மேல்மலைக் கிராமங்களில் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அங்கிருந்து ஏராளமான லிட்டர் குடிநீர் வீணாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 அத்துடன் 10 நாள்களுக்கு ஒரு முறையே மன்னவனூர் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்யும் நிலையில் குடிநீர் வீணாவதைத் தடுக்க உடனே குழாயை சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com