கொடைக்கானல் அருகே தீக்குளித்து பெண் சாவு

கொடைக்கானல் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொடைக்கானல் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
 கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரும்பாறையைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கார்த்திகா (24). இவர்களுக்கு ஈஸ்வரன் (5), மகாலட்சுமி (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
 இந்நிலையில், கார்த்திகா அடிக்கடி செல்லிடப்பேசியில் பேசி வந்ததை பாலமுருகன் கண்டித்ததால், கார்த்திகா, தனது தாயார் வீட்டுக்குச் சென்று விட்டாராம். பின்னர் அங்கிருந்த கார்த்திகாவை அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்கு பாலமுருகன் வந்துள்ளார். மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து, பாலமுருகன் வெளியே சென்றிருந்த நிலையில்,  கார்த்திகா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். தாண்டிக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com