நத்தம் பகுதியில் வியாழக்கிழமை (பிப். 15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நத்தம் உதவி செயற்பொறியாளர் உஷாபிரியன் சூரியநாத் தெரிவித்திருப்பதாவது: நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வியாழக்கிழமை (பிப். 15) நடைபெறுகிறது. இதனால், நத்தம், கோவில்பட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனதெரிவித்துள்ளார்.