ஏ, பி-கிரேடு ஊழியர்களுக்கு  போனஸ் வழங்க கோரிக்கை

தமிழக அரசு சார்பில் ஏ மற்றும் பி-கிரேடு ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் போனசை நிகழாண்டிலும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு சார்பில் ஏ மற்றும் பி-கிரேடு ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் போனசை நிகழாண்டிலும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
   இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளது:  தமிழக அரசு சார்பில்  சி மற்றும் டி கிரேடு ஊழியர்களுக்கு மட்டும் ரூ. 3 ஆயிரம் பொங்கல் போனசாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏ மற்றும் பி கிரேடு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 பொங்கல் போனஸ் நிகழாண்டு அறிவிக்கப்படவில்லை. இந்த முடிவினை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்து உடனடியாக பொங்கல் போனசை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com