தமிழக அரசு சார்பில் ஏ மற்றும் பி-கிரேடு ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் போனசை நிகழாண்டிலும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளது: தமிழக அரசு சார்பில் சி மற்றும் டி கிரேடு ஊழியர்களுக்கு மட்டும் ரூ. 3 ஆயிரம் பொங்கல் போனசாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏ மற்றும் பி கிரேடு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 பொங்கல் போனஸ் நிகழாண்டு அறிவிக்கப்படவில்லை. இந்த முடிவினை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்து உடனடியாக பொங்கல் போனசை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.