கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வளர்ந்துள்ள செர்ரி மலர்கள், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றன.
கொடைக்கானல் மலைப் பகுதிகளிலும் மற்றும் பிரையண்ட் பூங்காவிலும் ஏராளமான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது, பிரையண்ட் பூங்கா கண்ணாடி மாளிகையின் அருகே உள்ள செர்ரி மரத்தில் பனிக் காலங்களில் மட்டுமே பூக்கக் கூடிய செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்தப் பூக்கள் 2 மாதங்கள் மட்டுமே மரத்தில் இருக்கும். அதன்பின்னர், பூ உதிர்ந்து மரம் முழுவதும் செடி வளர்ந்து காணப்படும். தற்போது, மரம் முழுவதும் பூக்கள் வளர்ந்து காண்போரை கவர்கிறது. எனவே, இவற்றைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். மேலும், அதனருகே நின்று புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.