கொடைக்கானல் பேரிஜம் ஏரியை சுற்றிப் பார்க்க வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் கடந்த சில நாள்களாக காட்டுயானைகள் நடமாட்டம் இருந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்கு செல்ல வனத்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டுயானைகள் இடம் பெயர்ந்துள்ளதைத் தொடர்ந்து பேரிஜம் ஏரியை பார்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வன அலுவலர் ரவி தெரிவித்துள்ளார்.