திண்டுக்கல் மாவட்ட காமராசர் சிவாஜி தேசிய பேரவை சார்பில் திருப்பூர் குமரனின் 86ஆம் ஆண்டு நினைவு தினம், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் 52ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காமராசர் சிவாஜி பேரவையின் மாவட்டத் தலைவர் ஆ.பாண்டியன் தலைமை வகித்தார். மாநகரத் தலைவர் க.ஆனந்தன் முன்னிலை வகித்தார். அப்போது மறைந்த தலைவர்களின் உருப்படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராசர் சிவாஜி பேரவையின் நிறுவனர் சு.வைரவேல் செய்திருந்தார்.