பழனி அழகுநாச்சியம்மன் கோயிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்காக செவ்வாய்க்கிழமை சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.
பழனி கந்தவிலாஸ் விபூதி ஸ்டோர்ஸ் சார்பில் நடைபெற்ற இப்பூஜைகளை பழனிக் கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்க குருக்கள், செல்வசுப்பிரமணிய குருக்கள் உள்ளிட்டோர் செய்தனர். அம்மன் சன்னதி முன் கலசங்கள் வைக்கப்பட்டு கலச, விக்னேஷ்வரர், பஞ்சகவ்ய பூஜைகள் செய்யப்பட்டு, புண்யாவாஜனம் நடத்தப்பட்டது. பின் கலசங்கள் கோயிலை வலம் வர செய்யப்பட்டு, அழகுநாச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சோடஷ வழிபாடுகள் நடைபெற்றன. கோயில் பிரகாரத்தில் உள்ள வெள்ளையம்மாள், நாகம், கருப்பண்ணசாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
நிகழ்ச்சியில் கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன் விஷ்ணு, கண்காணிப்பாளர் முருகேசன், மணியம் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.