பழனியில் புதன்கிழமை தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 14 ஆம் அணியின் 12 ஆவது ஆண்டு உதய விழா நடைபெற்றது.
பழனி-புதுதாராபுரம் சாலையில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 14 ஆம் அணி செயல்பட்டு வருகிறது. இங்கு, காவலர் பயிற்சிப் பள்ளியும் இயங்கி வருகிறது. தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 14 ஆம் அணி துவங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவு பெற்று 12 ஆம் ஆண்டு உதயமாவதை முன்னிட்டு, புதன்கிழமை மாலை உதய விழாநடைபெற்றது. மதுரை தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். காவலர்களின் சீருடை அணிவகுப்புடன் நிகழ்ச்சி துவங்கியது. இதில் காவலர்களின் கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகளும் நடைபெற்றன. காவலர்களின் குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா நிறைவில், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.