jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்

"கொடைக்கானலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

By DIN  |   Published on : 14th January 2018 12:41 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

கொடைக்கானலை சுத்தமாக வைத்திருக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென, தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு மற்றும் கூட்டு தூய்மைப் பணி முகாமில் சனிக்கிழமை பங்கேற்ற நடிகர் சசிக்குமார் வலியுறுத்தினார்.
கொடைக்கானல் நகராட்சி சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, நகராட்சி ஆணையர் சரவணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் கலந்து கொண்டு, நகராட்சி அருகே சிறுவர் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பூங்கா வளாகத்தில் ருத்ராட்ச மரக்கன்றை நட்டார்.
அதையடுத்து, நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் கூட்டு தூய்மைப் பணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், சுகாதார ஆய்வாளர் சுப்பையா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் கொடைக்கானல் குறிஞ்சி அரிமா சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து நடிகர் சசிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். எனவே, நாம் கொடைக்கானலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இங்கு வசிக்கும் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளும் சுத்தமாக வைத்திருக்க உதவவேண்டும். சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கும் நாம் உதவவேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் 6-ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் உதவிட வேண்டும். கொடைக்கானல் நகரத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றுவோம் என்றார்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி

வீடியோக்கள்

ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்