கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி மூதாட்டி பலத்த காயம்

கொடைக்கானலில் வியாழக்கிழமை காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தார்.

கொடைக்கானலில் வியாழக்கிழமை காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தார்.
 கொடைக்கானல் அருகே ரைபிள்ரேஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிலோமினாள் (60). இவர் கடைக்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த காட்டெருமை அவரைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்காக பெற்று வருகிறார். 
இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறும் போது உணவுக்காக நகர் பகுதிக்குள் வரும் காட்டெருமைகள் குறித்து தகவல் தெரிவித்தால் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com