தந்தையை காப்பாற்ற முயன்ற மகன் மின்சாரம் பாய்ந்து சாவு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே கீழே விழுந்த தந்தையை காப்பாற்ற முயன்ற மகன், மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே கீழே விழுந்த தந்தையை காப்பாற்ற முயன்ற மகன், மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
 வத்தலகுண்டு அடுத்துள்ள ஓணான் கரடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ரகுவீரபாண்டியன் (35). இவர், சென்னை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில், தொழில்நுட்ப ஊழியராக பணிபுரிந்து வந்தார். 
 இந்நிலையில், ரகுவீரபாண்டியன் வத்தலகுண்டுவில் உள்ள தந்தையை பார்ப்பதற்காக, சனிக்கிழமை வந்துள்ளார். அப்போது, வீட்டு வாசலில் இருந்த எர்த் கம்பியை எதிர்பாராமல் தொட்ட சுப்பிரமணி கீழே விழுந்துள்ளார். இதனை அறியாத ரகுவீரபாண்டியன், தந்தையை தூக்க முயன்றார். 
 அப்போது, உதவிக்காக அருகிலிருந்த மின்கம்பியை அழுத்தமாக பிடித்த ரகுவீரபாண்டியன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு போலீஸார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
  மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com