பழனியில் மலர்ந்த  அபூர்வ பிரம்ம கமலம் !

பழனியில் ஒரு வீட்டில் வருடத்துக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ பிரம்ம கமலம் பூ ஞாயிற்றுக்கிழமை மலர்ந்துள்ளது. இதனை அப்பகுதியினர் ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.

பழனியில் ஒரு வீட்டில் வருடத்துக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ பிரம்ம கமலம் பூ ஞாயிற்றுக்கிழமை மலர்ந்துள்ளது. இதனை அப்பகுதியினர் ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.
புனிதமான மலராக கருதப்படும் பிரம்ம கமலம், செடியின் இலை நுனியில் பூக்கும். பழனி அடிவாரத்தில் உள்ள ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரி வீட்டில் இந்த பூ ஞாயிற்றுக்கிழமை இரவு பூத்துள்ளது. 
இந்த செடியில் பூ பூத்ததைத் தொடர்ந்து செடிக்கு அருகே விளக்கு ஏற்றி, பூஜை செய்யப்பட்டது. 
அப்பகுதியினர் ஏராளமானோர் வந்து பிரம்ம கமலம் பூவை பார்த்து வணங்கிச் செல்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com