கிணற்றில் இளைஞர் சடலம் மீட்பு

பழனி அருகே தனியார் தோட்ட கிணற்றில் திங்கள்கிழமை இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

பழனி அருகே தனியார் தோட்ட கிணற்றில் திங்கள்கிழமை இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.
     பழனியை அடுத்த ஆயக்குடி பொன்னாபுரம் ரயில்வே தண்டவாளம் அருகே தனியார் ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரைத் தொடர்ந்து திங்கள்கிழமை ஆயக்குடி போலீஸார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு ஆண் ஒருவரின் சடலம் கிணற்றின் ஓரத்தில் உள்ள திட்டில் கிடந்துள்ளது. 
  இறந்து பல நாள்களாக நிலையில், சடலம் அழுகியிருந்ததால் துப்புரவுத் தொழிலாளர்கள் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விசாரணையில், இறந்த நபர் ஆயக்குடியை சேர்ந்த பிரசாந்த் (30) என்று என்று தெரியவந்துள்ளது. 
திருமணமாகி குழந்தையில்லாத நிலையில், அவர் மதுவுக்கு அடிமையாகி ரயில்வே தண்டவாளத்தில் நடந்து செல்லும்போது கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com