கொடைக்கானல் அருகே மயான காளியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் அருகே கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பல்வேறு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல்,பண்ணைக்காடு, தாண்டிக்குடி,கடுகுதடி,மச்சூர், ஊத்து,வாழைகிரி,வத்தலக்குண்டு, கே.சி.பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டது.