வத்தலகுண்டு பகுதியில் புதன்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வத்தலகுண்டு காந்திநகர் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (48). ரியல் எஸ்டேட் தரகர். வத்தலகுண்டு பகுதியில் உள்ள கோயிலுக்கு புதன்கிழமை மாலை குடும்பத்தினருடன் பாலமுருகன் சென்றிருந்தாராம். பின்னர் 1 மணி நேரத்துக்குப் பின் வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தது. வீட்டிற்குள் சென்று அவர் பார்த்த போது, பீரோவிலிருந்த 8 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து, வத்தலகுண்டு காவல் நிலையத்தில் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.