ரௌடிகள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல்லைச் சேர்ந்த ரௌடிகள் இருவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த ரௌடிகள் இருவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் எஸ்எஸ்கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் தினேஷ் என்ற தினேஷ்குமார்(33). கடந்த 2017 நவம்பர் மாதம், 3 துப்புரவுத் தொழிலாளர்களை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர், மும்பையில் பதுங்கியிருந்தார். இந்நிலையில், தனிப்படை போலீஸார், அவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனர். 
தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினேஷ்குமாரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் பரிந்துரை செய்துள்ளார். 
அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அதற்கான உத்தரவை திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். இதேபோல், பிரபல ரௌடி மோகன்ராமின் கூட்டாளியான பாரதிபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்ற நரைமுடி கணேசன் என்பவரையும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
இவர், சார்பு ஆய்வாளரை கொலை செய்ய முயன்றதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு, மதுரை மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com