கொடைக்கானலில் உள்ள நூலகங்களை, தமிழக சட்டப்பேரவை நூலகக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை நூலகக் குழுத் தலைவர் அருண்குமார் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர்களான கலைச்செல்வன், லோகநாதன், கார்த்திகேயன், கிரி, பெரியண்ணன் அரசு உள்ளிட்டோர் கொடைக்கானல் வந்தனர். இக்குழுவினரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் வரவேற்றார்.
நூலகக் குழுவினர், கொடைக்கானல் பி.டி. சாலையிலுள்ள நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
இந்த ஆய்வின்போது, நிலுவையில் உள்ள நூலக வரித் தொகையினை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெற்று, நூலகக் குழுவிடம் வழங்கினர். இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.