கொலை வழக்கில் கைதான 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவரை வெட்டிக் கொலை செய்த 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்

திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவரை வெட்டிக் கொலை செய்த 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த பா.செல்வக்குமார் கடந்த ஜூலை 31ஆம் தேதி பித்தளைப்பட்டி பிரிவு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 
இந்த கொலை வழக்கு தொடர்பாக சித்தையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த கலீல் ரகுமான்(35), சி.முகமது காலித்(23), பி.முகமது சலீம்(30), 
கடலூர் மாவட்டம், திருப்பாப்புலியூர் பகுதியைச் சேர்ந்த ரா.சமீர் அலி(28) ஆகியோரை திண்டுக்கல் தாலுகா போலீஸார் கைது செய்தனர். 
 தற்போது இந்த 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், இந்த 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் பரிந்துரை செய்துள்ளார். 
அதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com