பழனியில் சனிக்கிழமை (செப்.15) முதல் மூன்று நாள்களுக்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறவுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, பழனியில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சனிக்கிழமையும், இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமையும், அகில இந்திய இந்து மகாசபா, இந்து மக்கள் கட்சி மற்றும் சிவசேனா சார்பில் திங்கள்கிழமையும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன. இதை முன்னிட்டு பழனியில் நூற்றுக்கணக்கான போலீஸார் மற்றும் வஜ்ரா, வருணா போன்ற கவச வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.