கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடியுடன் மழை பெய்தது.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மேக மூட்டம் காணப்பட்டபோதும், அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து பனியின் தாக்கம் அதிகரித்தது.
இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மேக மூட்டமும், லேசான சாரலும் இருந்து வந்தது.
அதைத் தொடர்ந்து, இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை கொடைக்கானல், பிரகாசபுரம், நாயுடுபுரம், பெருமாள்மலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.