பழனி, ரெங்கநாதபுரம் பகுதியில் செப்டம்பர் 26 மின்தடை

பழனி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 26) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பழனி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 26) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
       இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
பழனி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாகபுதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை மணி வரை பழனி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பழனி நகர், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்: வேடசந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலைத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (செப்.26) நடைபெறுவதால், அன்றைய தினம் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும்  மின்விநியோகம் நிறுத்தப்படும்.  ரெங்கநாதபுரம், தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, காசிபாளையம், நல்லபொம்மன்- -பட்டி, வாங்கலாபுரம், இராசாகவுண்டனூர், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி, வாங்கிலியகவுண்டன்புதூர், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் செ.காளிமுத்து 
தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com